Thursday, July 2, 2009

காதலும் திருமணமும்


திருமணத்திற்கு முன்
காதலன்: ஆம், கடைசிவரை காத்திருப்பது என்பது மிகவும் கடின மான ஒன்று
காதலி: அப்போ என்னை மறந்து விடப்போகிறாயா?
காதலன்: சேச்சே, அதெல்லாம் நான் ஒருநாளும் நினைத்தது கூட கிடையாது
காதலி: நீ என்னை உண்மையாக காதலிக்கிறாயா
காதலன்: அதில் என்ன சந்தேகம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு
காதலி: என்னை ஒரு போதும் ஏமாற்ற மாட்டியே ?
காதலன்: மாட்டேன், ஏன் இவை எல்லாம் கேட்கிறாய்
காதலி: என்னை முத்தமிடுவாயா?
காதலன்: சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம்
காதலி: என்னை அடிப்பாயா?
காதலன்: பைத்தியமா நீ, நான் ஒன்றும் அந்த மாதிரி ஆளு இல்லை
காதலி: நான் உன்னை நம்பலாமா?
காதலன்: ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
காதலி: டார்லிங்
திருமணத்திற்கு பின்
மிகவும் சுலமான ஒரே வழி கீழிருந்து மேலாக படிக்கவும்
பின் குறிப்பு:
எல்லாரும் நல்லாத்தான் படிச்சீங்க. அப்பறமும் ஏன் முறைக்கிறீங்க?
ரம்யா: அண்ணா ராகவன் அண்ணா எல்லாரும் என்னை அடிக்க வராங்க, காப்பாத்துங்கண்ணா
ராகவன் : ஏம்மா, எல்லாரும் அப்படி ஒன்னை வெரட்டறாங்க, நீ என்ன தப்பு செய்தே?
ரம்யா: ஒண்ணுமே செய்யலை அண்ணா, கல்யாணத்துக்கப்புறம்ன்னு ஒரு வரி போட்டேன் அதுலே வந்த வம்புதான்.
ராகவன்: போங்கப்பா ரம்யா சின்ன பொண்ணுதானே, மன்னிச்சுடுங்கப்பா
ரம்யா: தேங்க்ஸ் அண்ணா
இது சும்மா எழுதியது யாரும் தவறாக எடுத்து கொள்ளக்கூடாது

No comments:

Post a Comment